/* */

தாய்மாமன் வெட்டிக்கொலை; மைத்துனன் கைது

செங்கல்பட்டு அருகே தாய்மாமனை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மைத்துனனை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தாய்மாமன் வெட்டிக்கொலை; மைத்துனன் கைது
X

ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் இருளர் காலனியில் வசித்து வந்தவர் முரளி (எ) கைக்கோ முரளி வயது 25, இவர் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் அடுத்த அம்மணம்பாக்கம் கொல்லமேடு பகுதியில் உள்ள இருளர் குடியிருபில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டு செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

மேலும் இவர்மீது செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட காவல்நிலையங்களில் கொள்ளை வழிபறி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முரளியின் தாய்மாமனான சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது 40 என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முரளி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் வீட்டில் வேலை தேடி வருவதாக கூறி விட்டு சென்றுள்ளனர். ஆனால் அன்று மாலை வீட்டில் உள்ள கட்டிலில் துணியால் போர்த்தியபடி தலையில் வெட்டுக் காயங்களுடன் தினேஷ் பிணமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் இறந்த தினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தலைமறைவாகிய சைக்கோ முரளியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் சைக்கோ முரளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்குசென்ன்ற போலீசார் முரளியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே சைக்கோ முரளி மீது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கொலை மற்றும் வழிப்பறி தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 July 2021 4:20 AM GMT

Related News