/* */

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் வீரபாண்டியனை கொலை செய்ய முயற்சித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழக முன்னணி தலைவர்களில் ஒருவருமான, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கப் போராளியான வீரபாண்டியன் சென்னையில் கடந்த 04.09.2022 அன்று சில சமூக விரோதிகளால் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்டத் தலைநகர் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினரும் மாவட்ட AITUC பொதுச் செயலாளருமான தண்டபாணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினர் திருமானுர் ஆறுமுகம், மருதமுத்து, ஒன்றிய செயலாளர் கனகராஜ், அரியலூர் நகர கிளை செயலாளர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 7 Sep 2022 9:05 AM GMT

Related News