அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 307 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. பெறப்படும் மனுக்கள் மீது 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும். மனுக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்தும், தேவைப்படும் பட்சத்தில் களஆய்வு செய்து பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, தமிழக அணியில் இடம் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர்சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.