/* */

பொது மக்களுடன் பொங்கல் கொண்டாடிய அரசுகொறடா

பொது மக்களுடன் பொங்கல் கொண்டாடிய அரசுகொறடா
X

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொங்கல்விழாவில் கலந்து கொண்ட அரசுகொறடா ராஜேந்திரன் மாட்டுவண்டியில் ஏறிச்சென்று பொது மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் கிராமத்தில் சுற்றுலாத்துறை மற்றும் கலைபண்பாட்டுத்துறையின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அரசு தலைமைக்கொறடா தாமரை இராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, ஆகியோர் தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.இவ்விழாவில், சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழகத்தில் பாரம்பரிய நிகழ்ச்சியான தப்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், காளையாட்டம், பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறியடி, இசைநாற்காலி, மாட்டுவண்டி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மேலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கலைநிகழ்ச்சியினை பாராட்டி கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைஞர்களுக்கு மதிப்பூதியமாக மூப்பதாயிரம் வீதம் தொன்னூராயிரம் ரூபாய்-க்கான காசோலைகளை அரசு தலைமைக்கொறடா ராஜேந்திரன் வழங்கினார். தொடர்ந்து அரசு தலைமைக்கொறடா ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் மாட்டு வண்டியில் சென்று பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Updated On: 13 Jan 2021 9:45 AM GMT

Related News