சிலிர்ப்பை தரும் சிறப்புகள் நிறைந்த திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்....

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்புகளை தெரிந்துகொள்வோம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சிலிர்ப்பை தரும் சிறப்புகள் நிறைந்த திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்....
X

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்போம்; வாழ்வில் சிறப்புகளை பெறுவோம். ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’

வரும் டிச. 6ம் தேதி, திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. அதன் மகிமைகளை, பெருமைகளை அறியும் வகையில் ஒரு தொகுப்பு.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள்,21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து, 'நமசிவாய' சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும்,பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர்,சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்,அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும்,அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.


மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,"தீப மங்கள ஜோதி நமோ!!நம"என்ற பாடலை பாடி வழிபட்டால், வாழ்வில் மங்களம் பெருகும்.

கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள், மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண, சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள்,மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை,தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலை மலை 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல 8 கி.மீ. பாதை உள்ளது.மலை ஏற 4 மணி நேரமாகும்.

கார்த்திகை தீபத்துக்கு சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு, ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

கார்த்திகை தீபம் தினத்தன்று, சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்,அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை, நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை, 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.இந்த தீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.

சிவபெருமான் கார்த்திகை தீபநாளில், அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம்.இந்த நடனத்துக்கு, 'முக்தி நடனம்' என்று பெயர்.

கார்த்திகை தீபம் தினத்தன்று, ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.

தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே,அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக, இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை "இறைவன் ஒருவனே"என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

கார்த்திகை தீபத்தன்று, அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், "அண்ணாமலையாருக்கு அரோகரா"என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து,மனதை ஆன்மாவில் அழித்து,உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்".இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3 மணிகள் உள்ளன.அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது.மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது.இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

'சக்தியும் சிவமும் ஒன்றே' என்ற உண்மையை பிருங்கி முனிவருக்கு உணரவைத்து,சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்றனர்.அந்த நெருப்பு மலையாக மாறியது.அதுவே கோவிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

Updated On: 25 Nov 2022 4:54 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  2. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  3. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  4. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
  5. நாமக்கல்
    மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு
  7. தேனி
    தேனியில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள்...
  8. ஆலங்குளம்
    சாலையை சீரமைக்க கோரி செடி நடும் போராட்டம்
  9. தமிழ்நாடு
    Thevar Dialogue in Tamil Lyrics-முத்துராமலிங்க தேவரின் பொன்மொழிகள்..!
  10. தேனி
    தலைகீழாக மாறியது தேனி மாவட்டத்தின் பருவநிலை