சிறைக்கு போகும் 3 தி.மு.க. அமைச்சர்கள்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி

சிறைக்கு போகும் 3 தி.மு.க. அமைச்சர்கள்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 3 தி.மு.க. அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என அண்ணாமலை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்து கூறிவரும் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தி.மு.க.வின் மூன்று அமைச்சர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சிறை செல்வார்கள் எனக்கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை. சமீபத்தில் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து தனது நடைபயண நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து இருந்தார். தற்போது தனது பயணத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார் அவர் .

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் என்ற இடத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

அப்போது பேசியிருக்கும் அவர் மக்களுக்கு உயர்கல்வியை போதிக்க வேண்டிய அமைச்சர் பொன்முடி சிறை செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார் .ஏற்கனவே ஒரு அமைச்சர் சிறையில் இருக்கும் நிலையில் 11 தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மூன்று தி.மு.க. அமைச்சர்கள் சிறை செல்வார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் இவரது பேட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story