அடுத்தது நீங்கள் தான்: எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்கிற்கு கொலை மிரட்டல்

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலைக் கண்டித்து ட்வீட் செய்ததற்காக எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்குக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

Update: 2022-08-14 03:56 GMT

சக பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலைக் கண்டித்ததைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்கிற்கு கொலைமிரட்டல் வந்துள்ளது.

தனக்கு கொலைமிரட்டல் விடுத்த பயனரின் அச்சுறுத்தல் செய்தியின் ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் ரௌலிங் பகிர்ந்து கொண்டார்.

ஹாரி பாட்டர் புகழ் ரௌலிங், எழுத்தாளர் ருஷ்டி குத்தப்பட்ட சம்பவத்ட்விட்டர் பதிவில், ருஷ்டி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் என்று நம்புவதாகவும் கூறினார். அதற்கு பதில் பதிவிட்ட ஒரு பயனர், "கவலைப்பட வேண்டாம். அடுத்தது நீங்கள் தான்." என பதிவிட்டுள்ளார்


கொலை மிரட்டல் விடுத்த ட்விட்டர் முகப்பில் மேற்கு நியூயார்க்கில் நடந்த இலக்கிய நிகழ்வின் போது ருஷ்டியை பலமுறை கத்தியால் குத்திய நியூஜெர்சியைச் சேர்ந்த ஹாடி மாதரைப் பாராட்டி செய்தி இருந்தது 

Tags:    

Similar News