கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்த புகாருக்கு இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களுக்கு, இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-16 01:15 GMT

கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான புகார்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டை, கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976ஆம் வருட, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட குற்றச் செயலாகும்.

தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் (Toll Free Help line)/1800 4252 650 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தான் வாங்கிய கடனுக்காகவோ அல்லது முன்பணத்திற்காகவோ அல்லது சில சமூக கடமைகளுக்காகவோ அவரின் விருப்பப்பட்ட இடத்திற்கு செல்லும் உரிமை, விருப்பப்பட்ட வேலை செய்யும் சுதந்திரம் மற்றும் தான் உற்பத்தி செய்த பொருட்களை சந்தை நிலவர மதிப்பின்படி விற்பனை செய்யும் உரிமை ஆகியவற்றை இழந்திருந்தாலோ அல்லது உடல் சார்ந்த வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலோ அது தொடர்பான புகார்களை பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News