விருதுநகர் அருகே அடிப்படை வசதிகள் கோரி எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ரோசல்பட்டி ஊராட்சி பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர கோரி எம்எல்ஏவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Update: 2021-12-03 02:17 GMT

ரோசல்பட்டி ஊராட்சி பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர கோரி எம்எல்ஏவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்வதற்கு முறையாக கால்வாய் அமைத்து தரவேண்டும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும் எனக்கோரி சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தால் நகர் ஜக்க தேவி நகர் சத்ய சாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் செல்வம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கடைகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த பகுதியில் முறையாக தார் சாலைகள் அமைத்து தர வேண்டும் என கோரி பாண்டியன் நகர் தேவர் சிலை முன்பு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் சீனிவாசன் அவர்களை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்ததை அடுத்து சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்

Tags:    

Similar News