பணியின் போது தற்கொலை செய்த காவலரின் குடும்பத்திற்கு ரூ 7,27 ,500 நிவாரணம்

விருதுநகரில் பணியின் போது தற்கொலை செய்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 7,27 ,500 நிவாரணம் வழங்கப்பட்டது.

Update: 2022-02-27 15:14 GMT

தற்கொலை செய்து கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாடர்ன் நகரில் வசித்தவர்கள் ராதாகிருஷ்ணன் -பானுமதி தம்பதியினர்.

ராதாகிருஷ்ணன் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்

இவரது மனைவி பானுமதி சிவகாசி நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக தற்போது பணிபுரிந்து வருகிறார்.

ராதா கிருஷ்ணனுடன் கடந்த 1993ஆம் ஆண்டு பணியாற்றிய சக காவலர்கள் ஒன்றிணைந்து ரூபாய் 7 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாயை அவரது குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்கினார்கள்

Tags:    

Similar News