விருதுநகரில் மண் எடுக்க அனுமதி: மண்பாண்ட தாெழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் தலைமையில் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் வழங்கிய மனுவில் உலோகப் பொருள் வரவினாலும், தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் வருகை தந்துள்ளதால் மண் பாண்ட பொருட்களை உடையும் பொருட்களாக கருதுகிறார்கள்.
பல்லாண்டு காலமாக களி மண்ணை மூலப்பொருளாக கொண்டு பணியாற்றி வருகின்ற விருதுநகர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது செங்கல், செறுகு ஓடு செய்வதற்கு ஏற்ற களி மண்ணை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.