விருதுநகரில் வாகனச்சோதனையில் 288 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது

விருதுநகரில், வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-02-17 00:15 GMT

விருதுநகர்- சிவகாசி சாலையில்,  குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்ததில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருதுநகர்,  பாண்டி நகர் பகுதியைச் சார்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 288 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விருதுநகர் யானைகளை தெருவில் அரசு டாஸ்மாக் கடை ஒன்றில் பார் எடுத்து நடத்தி வருவதும் தெரியவந்தது

இன்று முதல்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை  ஓட்டி வந்த முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்து,  ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News