விருதுநகரில் ஏழைப் பெண்களுக்கு ரூ.46 இலட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம்

விருதுநகரில் ஏழைப் பெண்களுக்கு ரூ.46 இலட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2022-01-14 11:04 GMT

விருதுநகரில் நடந்த நிகழ்வில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் கலந்து கொண்டு மாவட்டத்தில் 55 படித்த ஏழை எளிய பெண்களுக்கு ரூ. 25 இலட்சம் திருமண நிதி உதவிகள் மற்றும் ரூ. 20.88 இலட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும் என மொத்தம் ரூ. 46.13 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை வழங்கினார்.

Tags:    

Similar News