விருதுநகர் மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ நேரில் ஆய்வு

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ சீனிவாசன் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-11 05:30 GMT

தமிழகம் முழுவதும் கொரோனோ நோய்தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் அனைத்து மருத்துவமனையிலும் கொரோனோ நோய்தொற்றுக்கான மருத்துவ வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தான ஆய்வுகளை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இதனையடுத்து விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனோ நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தான ஆய்வினை விருதுநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை கல்லூரி முதல்வர் திருவாசகமணியிடம் மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் தமிழக முதல்வர் உத்தரவு படி கொரனோ நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளதா என்பதையும் உணவு மற்றும் படுக்கை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தாகவும் தேவையான அளவு உள்ளதாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தாகவும் கூறினார்

Tags:    

Similar News