திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது; இன்று, 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று 71 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1327 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.