சாலைப் பணிகளை திருவண்ணாமலை நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆய்வு

திருவண்ணாமலையில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-25 07:10 GMT

திருவண்ணாமலையில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டில்  மகாசக்தி நகரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.5 கோடியில் கழிவுநீர் கால்வாயுடன் அமைக்கப்படும் தார்சாலை பணியை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ,பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News