முன்னாள் படைவீரா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி பெற முன்னாள் படைவீரா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-09-04 09:19 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்).

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04175-233047 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News