திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

திருவண்ணாமலையில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-21 05:17 GMT

திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ்.

இதுகுறித்து திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்ட நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல், நில உடைமைப்பதிவுகள் மேம்பாட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் திருத்தம் மற்றும் நத்தம் நிலவரித்திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றில் தீர்க்கப்படவேண்டிய கோரிக்கைகள் குறித்து நாளை (22ம் தேதி) காலை 11.00 மணியளவில் ஆட்சியர் அலுவலக வாளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது.

அதுசமயம் மேற்கண்ட நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள உரிய ஆதார ஆவணங்களுடன் மனுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News