திருவண்ணாமலை: சுற்றுலா தலங்களுக்கு செல்ல அக்.3 வரை தடை நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், அணைகள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல, அக்டோபர் 3 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

Update: 2021-09-26 01:30 GMT

கலெக்டர் பா.முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள் , பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அக்டோபர் 3 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்டத்தில உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவற்றை பார்வையிட, பொதுமக்களுக்கு வரும் 26 ம் தேதி வரை (இன்று) ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவு, வரும் அக்டோபர்  3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News