திருவண்ணாமலையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-19 06:19 GMT

திருவண்ணாமலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்,    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை உரிமம் வழங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருவண்ணாமலையில் பி.எஸ்.என்.எல்.  அலுவலகம் முன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், கார்ப்பரேட்களுக்காக மௌனம் காக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று கூறி, கோஷங்களை எழுப்பியதுடன் செல்போன் மூலம் செல்பி எடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்தர், மாநிலத் துணைச் செயலாளர் நந்தன், மாவட்ட செயலாளர் அன்பரசன், உட்பட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News