பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பிஜேபி பிரமுகர் வீட்டு வாசலில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சினர்.

Update: 2021-04-27 12:00 GMT

திருவண்ணாமலை செங்கம் சாலை, ரமணா நகர், 3வது தெருவில், வசிக்கும் பிஜேபி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தன். இவர் வீட்டு வாசலில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டின் கதவை பலமாக தட்டியதாக சொல்லப்படுகிறது.

கீழே இறங்கி வந்த போது திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு பாட்டலை வீட்டின் கதவு முன்பு வீசி விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டு சரியாக தீப்பற்றாததால் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் அருணை அனந்தன் தீ காயங்கள் இன்றி உயிர் தப்பினார். மேலும் வீட்டின் முன்பும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சரியாக எரியாத நிலையில் இருந்த பெட்ரோல் குண்டை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் முன்விரோதம் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News