கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் மு.சாந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் வெங்கடேசன் கலந்து கொண்டு 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில், கொளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் உஷா சவுந்திரராஜன், குறுவட்ட நில அளவர் ராஜா, குறுவட்ட அளவர் காவேரி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்தகுமார், உத்தரகுமார், ஜெயலட்சுமி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.