திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு

அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்க படனம் எனப்படும், பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-14 08:40 GMT

அண்ணாமலையார் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சார்வரி தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டான, சுபகிருது வருட பிறப்பை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விநாயகருக்கு தங்கக்கவசம், அருணா சலேஸ்வரர் மூலவருக்கு தங்க நாகாபரணம், வெள்ளி ஆவுடையார் சாத்தப்பட்டது. உண்ணாமுலையம்மனுக்கு வைர கிரீடம், தங்க காசு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை நடந்தது.

இதை தொடர்ந்து, கோவில் சிவாச்சாரியார்கள், சுவாமி தங்கக்கொடி மரம் அருகில் உள்ள, சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து, புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தனர்.

Tags:    

Similar News