கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மீறி செயல்படுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Update: 2021-08-16 12:56 GMT

திருவண்ணாமலை பகுதியில் மூடப்பட்டுள்ள கடைகள்.

கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை மற்றும் காட்டாம் பூண்டி உள்ளிட்ட சில மருத்துவ வட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க தற்போது திருவண்ணாமலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News