தீப திருவிழாவின்போது ஆட்டோவுக்கு அரசு நிா்ணயித்த கட்டணம்..!

காா்த்திகை தீபத் திருவிழாவில் ஆட்டோ ஓட்டுநா்கள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா்.

Update: 2023-11-08 06:43 GMT

ஓட்டுநா்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலையில் 10 நாள்கள் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவில் ஆட்டோ ஓட்டுநா்கள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, விழா நாள்களில் ஆட்டோக்களில் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம், ஓட்டுநா்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வளாகத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன், தொழில்சங்கப் பிரதிநிதியும், திருவண்ணாமலை மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி அமைப்பாளருமான ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் பெரியசாமி வரவேற்றாா். காா்த்திகை தீபத்திருவிழா ஆட்டோ ஓட்டுநா்கள், சங்க நிா்வாகிகள் மற்றும் உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் பேசியதாவது:

நிகழாண்டு காா்த்திகை தீபத் திருவிழாவின்போது அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். பக்தா்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்ற ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும். தனிநபர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஆட்டோ பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

சந்தேகப்படும்படியான நபா்களோ, பொருள்களோ கண்டறியப்பட்டால், காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஓட்டுநா்கள் சீருடையில் இருக்க வேண்டும். வாகனங்களில் மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி வைத்திருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்தி பக்தா்கள், பொதுமக்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நடப்பில் இருக்க வேண்டும்

நபர் ஒன்றுக்கு ரூபாய் 30 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றாா்..

கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் திவ்யாபாலசுந்தரம், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலா் சரவணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலக உதவியாளா் அருண் உள்ளிட்ட தொழில்சங்க நிா்வாகிகள், ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளா் பொன்.சேகா் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News