பிரதோஷ விழாவிற்கு அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலையில் பிரதோஷ விழாவிற்கு நீண்ட நாளைக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று சோமவார தேய்பிறை பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் பிரகாரத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.