அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா

தீபத்திருவிழாவின் 6ம் நாள் விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.

Update: 2021-11-15 06:08 GMT

தீபத்திருவிழா ஆறாம் நாள் விழா 

திருவண்ணாமலை தீபத்திருவிழா இன்று 6-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர்.

அப்போது சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது. 

Tags:    

Similar News