திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 377 உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1474 ஆக உள்ளது. இன்று 94 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுவரை மொத்தம் 22,149 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். குணமடைந்தோர் மொத்தம் 20,382 பேர் இது வரை வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 293 பேர் கொரோனா தோற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.