திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-03-15 14:32 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும்  சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News