திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையாெட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

Update: 2021-11-15 14:05 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா நடைபெறும் நாளான  நவம்பர் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும்,  அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் 4ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும். தீபத் திருவிழா நாளான நவம்பர் 19 ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயங்கும்  என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News