திருவண்ணாமலையில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
ஆந்திர அமைச்சராக உள்ள நடிகை ரோஜா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு விஐபிகள் சினிமா நட்சத்திரங்கள் வெளி மாநில அமைச்சர்கள் வருவது வழக்கம் , நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செல்வமணி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் அதிகாரிகள் அவரை வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்பு அவருக்கு கோயில் சார்பாக சிறப்பு பிரசாதங்கள் சிவாச்சாரியார்கள் வழங்கினர்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு சுவாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்திருந்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக மாநில தடகள சங்கத்தின் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், அவர்கள் அமைச்சரை வரவேற்று நினைவு பரிசினை வழங்கினார்.