திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 100 செல்போன்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-05 14:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை எஸ்பி பவன்குமார் உரியவரிடம் ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செல்போன் காணாமல் போனதாக மற்றும் திருடு போனதாக காவல் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட புகார்களை திருவண்ணாமலை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், அவர்கள் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷி.ராஜகாளீஸ்வரன் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News