நெல்லையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இயந்திர சக்கர நாற்காலி: சபாநாயகர் வழங்கல்

வளர்ச்சித் திட்ட ஆய்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இயந்திரத்துடன் கூடிய சக்கர நாற்காலிகளை சபாநாயகர் வழங்கினார்.

Update: 2021-10-27 13:21 GMT

நெல்லையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இயந்திரத்துடன் கூடிய சக்கர நாற்காலியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இயந்திரத்துடன் கூடிய சக்கர நாற்காலியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.மணிவண்ணன், சேரன்மகாதேவி சார் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பா.விஷ்ணுசந்திரன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு இயந்திரத்துடன் கூடிய சக்கர நாற்காலிகளை வழங்கினார்கள்.

Tags:    

Similar News