கொரோனா தொற்றினால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்

கொரோனா தொற்றினால் இறந்த 5 பேரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்- நெல்லை மாவட்ட தன்னார்வலர்கள்.

Update: 2021-05-10 05:32 GMT

நெல்லையில் கொரோனா தொற்றினால் பாதிப்படைபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் இறந்தவர்களை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்யும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

நெல்லையில் பல குழுக்களாக பிரிந்து மக்களுக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர். நான்கு ஆண்கள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உறவினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது அலியை தொடர்பு கொண்டு உடலை நல்லடக்கம் செய்ய உதவி கோரினர்.

இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வ குழுவினர் ஐவரின் உடலை பெற்று, சமாதானபுரம்,பேட்டை, பத்தமடை, கயத்தார், நாகர்கோவில் அடக்கஸ்தளத்தில் அவரவர் மதப்பிரகாம் நல்லடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News