மழைநீர் தேக்கம் குறித்து புகார் செய்ய ஆன்லைன் வசதி: மாவட்ட நிர்வாகம்
நெல்லையில் மழை நீர் தேங்கி இருந்தால் பொதுமக்களே இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறையை மாவட்ட நிர்வாகம் அறிமுகம்.
நெல்லையில் மழை நீர் குறித்த விபரங்களை பொது மக்களே நேரிடையாக பதிவு செய்யும் முறை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் முதன் முறையாக அறிமுகம்.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தங்கள் வசிப்பிடங்களில் மழை நீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணைய தளம் வழியாக பொது மக்களே நேரிடையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்.
இதன் மூலம் பதிவு செய்யப்படும் விபரங்கள் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.