நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பாலுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லை மாநகராட்சி 22 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு.

Update: 2022-02-08 10:44 GMT

அதிமுக சார்பில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி கோடிஸ்வரன் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

நெல்லை மாநகராட்சியில் 22வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் S.பாலுசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி அதிமுக சார்பில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் S.பாலுசாமி கோடிஸ்வரன் நகர் பகுதியில் உள்ள 1வது, 2வது, 3வது, தெருக்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்கும் போது தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. எனவே நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 22 ஆவது வார்டு வட்டச்செயலாளர் சைலப்பன் உட்பட ஏராளமான தொண்டர்கள் வேட்பாளர் உடன் வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News