நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக நாளை (09-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையின் காரணமாக நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 09ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.