திருநெல்வேலியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம்

திருநெல்வேலி டைட்டன் ஐ பிளஸ் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Update: 2021-12-26 16:08 GMT

திருநெல்வேலியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி டைட்டன் ஐ பிளஸ் மற்றும் ஜவஹர் நகர் தொழில் வர்த்தக நல சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தொழிலதிபர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். உடன் டைட்டன் ஐ பிளஸ் உரிமையாளர் ஹரி பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், வர்த்தக சங்கத் தலைவர் திருப்பதி, செயலாளர் ராஜா, பொருளாளர் செந்தில்குமார் ஆலோசகர் மேக்ஸ் பிரின்ஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்ததுடன் கண் சம்பந்தமான பல்வேறு நோய் அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணங்கள் கண்டறிதல் உட்பட மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.

Tags:    

Similar News