நடுக்கல்லூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு.

Update: 2021-12-16 13:20 GMT

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுத்தமல்லி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுத்தமல்லி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது. இதில் சுத்தமல்லி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

முககவசம் அணிதல், பேருந்தில் சமூக இடைவெளியில் செல்லுதல், உடல் சுத்தம், கைககளை கழுவுதல் குறித்தும், கோரோனா தொட்டியிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்றும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News