நெல்லை அருகே சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் இயக்கத்தை அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

Update: 2022-05-26 13:38 GMT

நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

காங்கிரஸ் இயக்கத்தை அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், காங்கிரஸ் இயக்கத்தையும் அவதூறு பரப்பும் வகையில் செயல்படும் நாம் தமிழர் சீமானை கண்டித்தும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மேல் பொய் புகார் அளித்து அரசியலில் அவர்களின் வளர்ச்சியை தடுக்க அவதூறு பரப்பும் மத்திய அரசை கண்டித்தும் நெல்லை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு இளைஞர் முன்னாள் பொது செயலாளர் யோபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவர் மரிய குழந்தை, நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News