நெல்லை அருகே சாெத்து பிரச்சனையில் தந்தை மீது தாக்குதல்: மகன் கைது

கோடகநல்லூரில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-26 13:22 GMT

சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த மகன் கைது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோடகநல்லூர் குடிபடை தெருவை சேர்ந்த அய்யாகுட்டி என்ற தம்பு (85) என்பவருக்கும், அவருடைய இரண்டாவது மகன் நல்லபெருமாள் என்ற உச்சிமாளி(55) என்பவருக்கும் வீடு சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு நல்லபெருமாள் என்ற உச்சிமாளி என்பவரும், அவரது மகள் மாரியம்மாளும் அய்யாகுட்டி என்ற தம்பு என்பவரின் வீட்டிற்கு முன்பு வைத்து அவரை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் அய்யாகுட்டி புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முத்துராஜ் விசாரணை மேற்கொண்டு அய்யாகுட்டி என்ற தம்புவை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்த நல்லபெருமாள் என்ற உச்சிமாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Tags:    

Similar News