நெல்லை 15 வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல்
நெல்லை மாநகராட்சி 15 வது வார்டுக்கு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 15 வது வார்டு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக பாேட்டியிட பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்
இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் வார்டு எண் 15ல் போட்டியிடும் வேட்பாளர் பாலசுப்பிரமணியன் தேர்தல் உதவி அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்