நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் விழா

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா. காந்திமதி அம்பாளுக்கு சிகர நிகழ்ச்சியான முளைகட்டும் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Update: 2021-08-10 17:16 GMT

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா நடைபெற்றது.

நெல்லை, நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கவில்லை.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா இன்று அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த திருவிழாவிற்காக சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் காந்திமதி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, அம்பாளுக்கு கண்ணாடி காட்டி நலுங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முளைக்கட்டிய தானியங்களை சிறப்பு பூஜை செய்து அம்பாளுக்கு மடியில் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி திருவிழா நடைபெற்றது.

Tags:    

Similar News