நெல்லை: சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-01 04:45 GMT

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாரியப்பன், நெல்லை மேலப்பாளையம் மேலநத்தம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தமுத்துராமன் என்ற சரவணன் என்ற சைனா ஆகிய இருவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் இருவரையும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் பரிந்துரைத்தார்.

அதன்பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்படி , மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தார். இதற்கான உத்தரவு ஆணையை,  01-10-2021 ம் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Tags:    

Similar News