திருச்சி புத்தக திருவிழாவிற்கு செல்ல வாசகர் வட்ட கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி புத்தக திருவிழாவிற்கு திரளாக செல்வது என வாசகர் வட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-22 15:25 GMT

திருச்சி உறையூர் வாசகர் வட்ட கூட்டம் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் உறையூர் குறத்தெரு ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம், அதன் தலைவரும் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊர்ப்புற நூலகர் ஆ.விஜயலட்சுமி 2021- 2022ல் அதிக உறுப்பினர்களை சேர்த்தமைக்காக  பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பாராட்டு பெற்ற கேடயத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மற்றும் திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருச்சி புத்தகத் திருவிழாவில் குறத்தெரு ஊர்ப்புற நூலகத்திற்கு, வாசகர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கான நன்கொடைகளை வாசகர் வட்ட பிரதிநிதிகள் அணைவரும் அளித்தனர். வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் புத்தக திருவிழாவிற்கு வாசகர்களோடு பெருந்திரளாக சென்று நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News