திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

என்.ஐ.ஏ.நடவடிக்கைகளை கண்டித்து திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-23 15:34 GMT

திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறைகளை கொண்டு  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற சேவை அமைப்பினுடைய தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்ததாக கூறி திருச்சியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாமிய கூட்டமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான்  ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதில்  துணை ஒருங்கிணைப்பாளர் உதுமானலி, ஜமாஅத்து இஸ்லாமிய மாவட்ட செயலாளர் சாகுல்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லா வகிது இஸ்லாமிய ஹிந்த் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா, எஸ்.டி.பி.ஐ கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மஜ்லிஸ் கட்சி மாநில செயலாளர் இக்பால், எஸ்.டி.பி.ஐ கட்சி வடக்கு மாவட்ட தலைவர் நியாமத்துல்லா,  ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஜாகீர் மாவட்ட செயலாளர்என்.டி.ஐ.எப் உமர் அல்பர் நசீர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News