லால்குடி பகுதியில் 14-ம்தேதி மின்சாரம் வினியோகம் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக லால்குடி பகுதியில் 14-ம்தேதி மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-09-12 07:03 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தின் லால்குடி பகுதி செயற்பொறியாளர் அன்பு செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பூவாளூர் துணை மின் நிலையத்தில் 14 -9- 2022 அன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் லால்குடி அரசு பொது மருத்துவமனை, மணக்கால் அக்ரகாரம், மணக்கால் கிழக்கு, நன்னிமங்கலம், மும்முடி சோழமங்கலம் விவசாயப் பகுதிகள், பூவாளூர் பெருவள நல்லூர், வெள்ளனூர், இடங்கி மங்கலம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ,அன்பில், கொப்பா வழி, ஆதிகுடி, நடராஜபுரம், மேட்டங்காடு படுகை மங்கம்மாள்புரம், குறிச்சி பருத்தி கால், வழுதியூர், சாத்தமங்கலம், ஆனந்தி மேடு, காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News