நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டாரா?

நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டதாக பரவி வரும் தகவல், தமிழ் சினிமா வட்டாரத்தில், பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-01-08 07:30 GMT

நடிகர் விஜய் - சங்கீதாவுக்கு பிரிவுக்கு காரணம், நடிகை த்ரிஷா தான் என்று, கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டதாக கூறி தகவல் ஒன்று வெளியானது. இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சங்கீதாவிற்கும் விஜய்க்கும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும், சங்கீதா தற்போது தனது தந்தை வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் 'கில்லி' படத்தின் போது, நடிகர் விஜய் பிரபல நடிகை த்ரிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை த்ரிஷா, விஜய்யுடன் நெருக்கமான உறவில் இருந்தாராம். இதனால் விஜய்யுடன் தொடர்ந்து சில படங்களிலும் பயணித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதன்பின் 'எங்களுக்குள் எந்த ஒரு தவறான உறவும் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்,' என்று த்ரிஷா கூறினார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். நடிகர் விஜய் தற்போது பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷாவுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவில் 'ஜோடி' படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் நடிகை த்ரிஷா. இதனை தொடர்ந்து 'மவுனம் பேசியதே' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இடையில் காதல் தோல்வி, நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போன திருமணம் என பல சர்ச்சைகளிலும் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். மீண்டும் தன் இடத்தினை பிடிக்க தற்போது படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. 39 வயதை எட்டிய த்ரிஷா இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்க, நட்சத்திரங்களின் விவாகரத்து செயல்களால் தான் திருமணம் செய்யவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார்.


குடிக்கு அடிமையாகி பார்ட்டி ஆண் நண்பர்கள் சகவாசம், நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் குடித்துவிட்டு பிரச்சனை என்று திரிந்ததால் தான் த்ரிஷாவுக்கு மார்க்கெட்டும் திருமணமும் ஆகவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் பல வீடியோக்களில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை த்ரிஷா ஒரு பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

'அவர்கள் எல்லோரும் திமிர் பிடித்தவர்கள். தேவையில்லாமல் இரு நடிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்டு பார்ப்பவர்கள். சிலர் சர்ச்சைகளால் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். அதையெல்லாம் நான் தேவையில்லாமல் கண்டுக்கொள்ள மாட்டேன். வேற வேலையே இல்லையா. இவ்வளவு நெகட்டிவிட்டி எதுக்கு. அனாவசியமாக ஏன் பேசுறீங்க.. உங்க வேலையை பாருங்க பயில்வான்,' என்று த்ரிஷா பதிலளித்துள்ளார்.

Similar News