தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங்: எஸ்பி பங்கேற்பு

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2021-10-22 17:37 GMT

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் நடைபெற்றது

தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அவர்களது குடும்பம், உடல்நிலை போன்ற காரணங்களால் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கும்,வேறு மாவட்டத்தில் இருந்து புதிதாக தென்காசி மாவட்டத்திற்கு பணியிடம் மாறி வந்தவர்களுக்கும் நேரடி கவுன்சிலிங் மூலமாக பனியிட மாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் விருப்பப்படும் காவல் நிலையம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயலுக்கு காவலர்கள் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

Tags:    

Similar News