காற்றுடன் பெய்த மழை: மரம் விழுந்ததில் வாகனங்கள் சேதம்

பாவூர்சத்திரம் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததில், மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்

Update: 2021-05-05 04:10 GMT

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதில் வாறுகாலில் கிடந்த சாக்கடையுடன் குப்பையும் சேர்ந்து தேங்கியதால் அந்த பகுதி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் கிழப்பாவூர் மைதானம் அருகில் உள்ள பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.



Tags:    

Similar News